
எழுச்சிமிகு சிலாங்கூர் மாநில திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி உதவித்தொகை வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 30,000 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எழுச்சிமிகு சிலாங்கூர் மாநில திட்டத்திற்கு மாநில அரசு 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
