
வெள்ளம் பாதித்த பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக லோரிகள் மூலம் கொண்டுச் செல்லப்படும் பெரிய அளவிலான குப்பைத் தோம்புகள் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன. இந்த குப்பைத் தோம்புகள் இலவசமாக விநியோகிக்கப் படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி அதனைப் பயன்படுத்தலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். ஷா ஆலம் மாநகர் மன்றமும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இந்த குப்பைத் தோம்புகளை தயார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
