
பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டூழிய இயக்கங்கள் உதவி புரிந்து வருகின்றன. அந்த வகையில் பேரா சுங்கை சிப்புட் வட்டாரத்தைச் சேர்ந்த ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த குமரவேல் உட்பட அனைத்து கால்பந்து வீரர்களும் வழங்கிய நிதி உதவியால் வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் நிர்வாகி அப்பளநாயுடு தெரிவித்தார்.
