
மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்கான சிலாங்கூர் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதில் தமது தரப்பு தற்போதைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வெள்ளப் பேரிடரில் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது. அத்தரப்பினருக்கு சக்திக்குட்பட்டு உதவுவதற்கான வழிகளை சிலாங்கூர் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் அவர்.
