
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் ஷா ஆலம் தாமான் ஸ்ரீ முடா கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளத்தினால் அனைத்து பொருட்களையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் இதுவரை 3,986 டன் எடையுள்ள குப்பை களை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. குப்பைகளை அகற்றும் பணி இன்னமும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
