
நாட்டில் நேற்று வரை 2 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 708 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 519 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 49 ஆயிரத்து 975 பேர் இரண்டு டேஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 40 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
