
இரண்டாவது வெள்ள அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு அத்தியாவசிய உணவுக் கையிருப்பு உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோஸோல் வாகிட் தெரிவித்தார். அமைச்சு 100 விழுக்காடு தயார் நிலையில் உள்ளதை அறுதியிட்டுக் கூற முடியும். நம்மிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளதோடு பொருள்களை வழங்க பல்வேறு தரப்பினர் தயாராகவும் உள்ளனர் என்றார் அவர்.
