
நாட்டில் மரண தண்டனை அகற்றப் பட வேண்டும் என்று பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மரண தண்டனை சட்ட நடைமுறையை மாற்றும் படியும் அந்த தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மரண தண்டனை அகற்றும் பரிந்துரை மீதான ஆய்வு விரைவில் நிறைவு பெறும் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி இன்று தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட ஆய்வுக் குழுவின் முடிவு அமைச்சரவை பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
