
கெடா மாநிலத்தில் பாடாங் செராய் கெ அடிலான் தொகுதி தலைவரும், பல அரசு சாரா இயக்கங்களின் பல பொறுப்புகளை வகித்து வந்த சமூக சேவையாளர் பேராசிரியர் டத்தோ பாலசுப்பரமணியம் நேற்று காலமானார். இவரின் மறைவை கேள்ளிவியுற்று அதிர்ச்சியடைந்தேன் என்று காப்பார் கெ அடிலான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ மணிவண்ணன் தெரிவித்தார். அவரின் இழப்பு தமிழ் சமுதாயத்திற்கும் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாக கருதுகிறேன், அவரின் சேவை என்று நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை அவரின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
