
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஷா ஆலம் தாமான் ஸ்ரீ மூடா மற்றும் கிள்ளான் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு மீரா கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. மீரா கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே பி. சாமி, உதவித் தலைவர்கள் டத்தோ குமார் அம்மன், சிப்பாங் மணியம் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்தும் இழந்து பரிதவிக்கிறார்கள். இவர்கள் துயரத்தில் நாமும் பங்கு கொள்வோம் என்று கே பி. சாமி தெரிவித்தார்.

