
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மலேசியத் தமிழர் சங்கத்தின் சார்பில் கிள்ளான் செந்தோசாவைச் சேர்ந்த சமூக சேவகி அஞ்சலை தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார். பலர் வழங்கும் உதவி பொருட்களை இவர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார். கோலாலம்பூரைச் சேர்ந்த டாக்டர் மதுமிதா தனது சார்பில் புத்தாடைகளை வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளார். டாக்டர் மதுமிதா கொடுத்த புத்தாடைகள் இந்த வாரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் என்று அஞ்சலை தெரிவித்தார்.

குப்பை என்று கூறுவதைவிட மக்களின் உழைப்பு என்று கூறலாம்