
ஸ்ரீநகர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தரப்பில் பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
