
நாட்டில் ஊழல் தடுப்புக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரே ஊழல் விசாரணை கோரிக்கைக்கு உள்ளான விவகாரம், அண்மைக் காலமாக பேசுபொருளாகி உள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி இரண்டு லட்சம் அளவுக்கு நிறுவன பங்குரிமையைக் கொண்டிருப்பதன் தொடர்பில் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று அம்னோ, பாஸ் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகள் வலுத்துள்ளன. நீண்ட நாட்களாக பேசப்படும் இவ்விவகாரம் தொடர்பில் அஸாம் பாக்கி மௌனம் காத்துவரும் நிலையில், பாக்கியை முறையாக விசாரிக்க சிறப்பு பணிக்குழுவை பிரதமர் நியமிக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்க்காசி கேட்டுக் கொண்டுள்ளார்.
