
5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு வீரியம் குறைந்த ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஃபைசர்-பயோடெக் தடுப்பூசி மீதான நிபந்தனை பதிவுக்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 30எம்சிஜி அளவுடன் ஒப்பிடும்போது, 10எம்சிஜி அளவு ஊசி மருந்தின் வீரியம் குறைவாகத்தான் இருக்கும்.
