
18 வயதுடையோர் இயல்பாக வாக்காளராக பதிவு பெற்றதால் தற்போது மலேசியாவில் பதிவுபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் 56 லட்சத்து 10,000 வாக்காளர்களை புதிதாக சேர்த்துள்ளதைத் தொடர்ந்து மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதாக ஜசெக அரசியல் விழிப்புணர்வு துணை இயக்குனர் ஓங் கியான் மிங் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 49 லட்சம் பேர் பதிவு பெற்ற வாக்காளராக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
