
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மகியாதீன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு மற்றும் மீட்சி மன்றம், நாட்டின் எல்லைகளை விரைவில் திறந்து விடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
கோரோனா தடுப்பு உட்பட நாட்டின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் இந்த மன்றம், நாட்டின் பொருளாதார மீட்சி குறித்தும் ஆலோசித்து வருகிறது.
அதன் அடிப்படையில், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பயணியர் போக்குவரத்தை முடுக்கிவிடும் வண்ணம் கோலாலம்பூர் தன் பன்னாட்டு எல்லைகளை விரைவில் திறந்துவிடுவதற்கான சாத்தியம் குறித்து ஆழமாக பரிசீலித்து வருவதாக தேசிய மீட்சி மன்ற தலைவர் டான்ஸ்ரீ மகியாடின் யாசின் தெரிவித்தார்.
