
ஹிஷாமுடின் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாக பொய்ச் சான்றிதழ் வழங்கிய் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் அதற்கான விளைவை எதிர்கொண்டாக வேண்டும்; எவர்மீதும் கருணை காட்டப்படாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் ஓன் தெரிவித்துள்ளர். இது சாதாரண விசயம் அல்ல; அப்பாவி மக்களின் மருத்துவம், உயிர்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ‘ஷெரட்டன் நகர்வு புகழ்’ ஹிஷாமுடின் சிறப்பு செய்தியாளர்க் கூட்டத்தில் தெரிவித்தார்.
