
பசுக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதைவிட நலிந்த மனிதர்களுக்கு உதவுவதே உன்னதமானது என்று சொன்னவர் நவீன துறவி விவேகானந்தர். சிக்காகோவில் நடைபெற்ற பன்னாட்டு சமய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுர மன்னர் தமிழ்த்திரு பாஸ்கர சேதுபதிக்கு வந்த அழைப்பு மடலை விவேகானந்தரிடம் கொடுக்காமல் ஒருவேளை, இவரே அதில் கலந்து கொண்டிருந்தால் சைவ நெறியைப் பற்றித்தான் பேசியிருப்பார். அப்படி நடந்திருந்தால், இன்று சைவ சமயம் உலகெலாம் பரவி இருக்கும். காலம் செய்த கோலத்தால் அவ்வாறு நடைபெற முடியாமல் போனது. சேதுபதி மன்னர் சைவ நெறி குறித்து ஆங்கிலத்தில் உரை ஆற்றினால் அவரை வளர்த்த ஆங்கிலேயர்களே அதைக் கேட்டு வியந்து நிற்பர். விவேகத் துறவி விவேகானந்தருக்கு இன்று பிறந்த நாள்!
