
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் 56 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இலவச மருத்துவ பரிசோதனையில் அதிகமானோர் கலந்து கொள்வது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தலைமையில் இந்த இலவச மருத்துவ பரிசோதனை மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது நேற்று குவாங்கில் நடைபெற்ற சோதனையில் 1,800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று செர்டாங்கில்
நடைபெறும் சோதனை யில் 4,000 பேர் பதிந்து கொண்டனர்.
அனைத்து இடங்களிலும் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வது தங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.



