
பள்ளிக்கூடங்கள் தற்பொழுது திறக்கபட்டிருக்கும் நிலையில், சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட்-19 பரிசோதனை வியூகத்தின்படி, ஒவ்வொரு வாரமும் 10 % மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வீட்டிலேயே உமிழ்நீர் மூலம் கொரோனா சோதனை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிப்பார்கள் என்றும் இதற்கான பரிசோதனைக் கருவிகள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்தப் புதிய முறை குறித்து கல்வி அமைச்சு விரைவில் அறிக்கை வெளியிடும் எனவும் அமைச்சர் ரட்ஸி கூறினார்.
