
இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் ஆறு வீடுகள் தீக்கரையானது. வீட்டை இழந்து பரிதவிக்கும் 6 குடும்பங்களுக்கு சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு தலா 2,000 வெள்ளி வீதம் 6 குடும்பங்களுக்கு 12,000 வெள்ளியை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் வழங்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஹன்னா இயோவுக்கு புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கை சேர்ந்த சிவகுமார், முத்து மற்றும் நாகராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
