
நாட்டிற்குள் நுழையும் மலேசியர்கள், நாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான நாட்களை அரசாங்கம் 10-இல் இருந்து 5 நாட்களாக குறைத்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்கள் 5 தினங்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டால் போதுமானது எனவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இரு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 7 நாட்களுக்கும், முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் 10 நாட்களுக்கும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; இனி பொதுஇடங்களில் உடல் வெப்ப நிலை அளவிடும் முறை காட்டாயமில்லை எனவும் கைரி மேலும் தெரிவித்தார்.
