
நிச்சயமற்ற அரசியல் நிலைமை சூழ்ந்திருந்த ஜோகூர் சட்ட மன்றம் கலைக்கப்பட்டது. இதன் தொடர்பில் மேன்மைசால் ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் மந்திரி பெசார் ஹஸ்னி முகமட் தன்னை சந்திக்க அரண்மனைக்கு வந்தபோது மாநில சட்டமன்றத்தை களைப்பதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
