
நாட்டின் தென் புலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிடும் என்று ஹஸ்னி முகமட் தெரிவித்துள்ளார். ஜோகூர் சட்டமன்றத்தின் 56 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்களை ஜோகூர் தேசிய முன்னணி கைப்பற்ற முடியும் என அம்மாநில தேசிய முன்னணியின் தலைவரான அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய முன்னணி கூட்டணியில் உறுப்பியம் பெறாத கட்சிகளின் ஒத்துழைப்பின்றி தேர்தலில் போட்டியிடுவதா என்பதை தேசிய முன்னணி உச்சமன்றம் முடிவு செய்யும். ஆனாலும் மாநில அளவில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடுவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றும் ஹஸ்னி கூறினார்.
