
நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகளை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்குபடி சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லைகளைத் திறக்கும் விவகாரத்தை அரசாங்கம் மிகவும் கவனத்தோடு பரிசீலிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob கூறினார். கோவிட்-19 தொற்று பரவல் தொடர்பாக மக்களின் கவலை, SOP நடைமுறைக்கான புதிய அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்துறையின் மூலம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என்றாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் அரசுக்கு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
