
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஒருவருக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வாணிப அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
பேரங்காடிகள் மற்றும் வியாபாரத் தலங்களில் பொருட்களை வாங்க விரும்பும் பொதுமக்களுக்கு 2 மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பேரங்காடிகள் மற்றும் வியாபர தளங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் sop விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை பரிசோதிக்கும் பணியில் 2,262 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார் அவர்.
