
டான்ஶ்ரீ இட்ரூஸ் ஹரூன் ( Tan Sri Idrus Harun) மீண்டும் தேசிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய நியமனத்தின் கீழ் ஓராண்டுக்கு அவர் அந்த பொறுப்பினை ஏற்பார் என அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali தெரிவித்தார்.ஏற்கனவே ஈராண்டுகள் அப்பொறுப்பை வகித்த Tan Sri Idrus Harun –னின் ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
