
மாலையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பேராக்கிலும் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.Kampar, Batu gajah ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் குறுகிய காணொளிகளை அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது .இதனிடையே, அம்மாநிலத்தில், நூற்றுக்கும் அதிகமானோர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் பெற்றிருப்பதாக , தெலுக் இந்தான் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் மொஹமட் இஸ்மாயில் மொஹமட் யூனுஸ் (Mohd Ismail Mohd Yunus ) தெரிவித்தார்.
