
வளர்ச்சி அரசியலுக்குப் பதிலாக கெடுக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ள வாரிசான் கட்சி, தீபகற்ப மலேசிய அரசியலில் ஈடுபட்ட கன்னி முயற்சியிலேயே முனைமழுங்கிப் போவதை ஒப்புக்கொண்டுள்ளது. எதிரணியின், குறிப்பாக நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குவங்கியில் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தந்திரத்தில் துன் மகாதீர் ஆட்டுவிக்கும்படி ஆடும் டத்தோஸ்ரீ முஹமட் ஷாபி அப்டால், ஜோகூரில் போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் தோல்வி அடையப்போவதை ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வாரிசான் பயணிக்கும் வாரிசான் தலைவர் ஷஃபி அப்டால் தெரிவித்துள்ளார்.
