
ஏப்ரல் 1 முதல் நாடு குறுந்தொற்று நிலைக்கு மாறினாலும் இரவு விடுதிகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் கூறியுள்ளார். கோவிட் -19 தொற்று பரவுவதற்கான ஆபத்தை பொழுதுபோக்கு வளாகங்கள், அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நாடு, பெருந்தொற்று கட்டத்தில் இருந்து குறுந்தொற்று நிலைக்கு ஏப்ரல் 1 முதல் மாறுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்திருந்த நிலையில், சுகாதார அமைச்சகத்தின் சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
