
எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி மே மாதம் மத்தி வரை நாட்டில் பருவநிலை மாற்றம் ஏற்படத் தொடங்கும்.அந்த கால கட்டத்தில் மலேசியா, பல திசைகளில் இருந்து பலவீனமான காற்றைப் பெறும். அந்த காற்று இடியுடன் கூடுய மழைக்கு வித்திடுமென மலேசிய வானிலை ஆய்வு துறை கணித்துள்ளது.மேற்கு கடற்கரை மாநிலங்களிலும், தீபகற்பத்தின் உட்புறப் பகுதிகளிலும் அந்த மோசமான வானிலை பெரும்பாலும் , மாலை மற்றும் இரவுக்கு முன்னதாக ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் திடீர் வெள்ளம் ஏற்படுவதோடு உறுதியற்ற கட்டடங்களுக்கு சேதங்கள் ஏற்படக் கூடுமெனவும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
