
திங்கட்கிழமை முதல் Eric Chang Wei Jie என்ற 4 வயது சிறுவன் காணாமல்போனது தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர். இவர்களில் ஒருவர் காணாமல்போன சிறுவனை பராமரித்து வந்தவர் என கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் Ahsmon Bajah தெரிவித்தார். தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் 17 குற்றச்செயல் பின்னணியை கொண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
