25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வெள்ளத்திற்குப் பின் 60,543 டன் குப்பை அழிப்பு: ஆட்சிக்குழு உறுப்பினர் இங் தகவல்

🔥 Views : 5
👁 Reading Now : 62

சிலாங்கூரில் வெள்ளத்திற்கு பின் குவிந்த 60,543 டன் குப்பைகள் மாநிலத்திலுள்ள ஆறு குப்பை அழிப்பு மையங்களில் புதைக்கும் முறையைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டன என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறியுள்ளார்.

அந்த திடக்கழிவுகள் கலங்களில் அடைக்கப்பட்டு நன்கு அழுத்தப்பட்ட நிலையில் மண்ணில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டதாகவும் ஊராட்சி மன்றங்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியை வோர்ல்ட் வைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அவை தரம் பிரிக்கப்பட்டு சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles