29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

10 வயதில் மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து 42 வயது பெண் வழக்கு:
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தான் பத்து வயது சிறுமியாக இருந்தபோது தன்னுடைய தந்தையால் ஒருதலைப்பட்சமாக முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து இப்போது 42 வயதாகும் மாது ஒருவர் தொடுத்த வழக்கை செவிமடுத்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி Noorin Badaruddin, இதில் சிவில் நீதிமன்றம் தலையிட முடியாதென்பதால் ஷரியா நீதிமன்றத்தை நாடும்படி தெரிவித்துள்ளார்.

அந்த வேளையில் தன் தாயும் தந்தையும் பிணக்கு கொண்டு மணவிலக்கிற்காக காத்திருந்தனர் என்றும், என் தந்தை என்னை ஒரு தலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றியதை செல்லாதென்றும், தனக்கு ‘இஸ்லாம்’ என்னும் அடையாளம் இல்லாமல் புதிய அடையாள அட்டை வழங்க தேசிய பதிவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பெண் கோரி இருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles