
MRT திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பில் 5 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த மூன்று இயக்குனர்கள் மற்றும் இரண்டு முன்னாள் இயக்குனர்கள் உட்பட ஐந்து பேர் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக MACC சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தவிர, சம்பந்தப்பட்ட இரண்டு முன்னாள் இயக்குனர்களும் 2017ஆம் ஆண்டில் மற்றொரு பொறியியல் நிறுவனத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்காக, அந்த நிறுவனத்திடம் 2 கோடியே 70 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
