
தான் கொண்டு வந்த ஒரு சட்டத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ள மத்தியக் கூட்டரசு, தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக அடித்தளத்தை இழந்துள்ளது என்று சுற்றுலாத் துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரீ அஸீஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் களைக்க வேண்டும் என்றும் உடனே 15-ஆவது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருவோரை இதற்குமுன் ஆதரித்தது இல்லையென்றும் ஆனால், ஒரு சட்டத்தை நிறைவேற்றும் ஆற்றலை எப்போதுஓர் அரசு இழக்கிறதோ அப்பொழுதே ஆட்சியில் நீடிக்க இந்த அரசுக்கு தகுதி இல்லை என்றும் உடனே இதன் தொட்டர்பில் வெளியிட்டன் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்களைச் சந்திப்பதற்து ஏதுவாக நாடாலுமன்றத்தை களைக்க வேண்டுமென்று அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
