
1955 ஆம் ஆண்டு வேலை சட்டத்தின் 265 ஆவது பிரிவின் திருத்தங்கள் அனைத்து தரப்பினருக்கும் நன்மையை கொடுக்கும் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
265 ஆவது சட்டத்தின்படி, அனைத்து ஊழியர்களுக்கும் பணிபாதுகாப்புடன் அது தொடர்பான நன்மைகளும் சம்பள பாகுபாடு இன்றி கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று இத்ன தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
265ஆவது சட்டத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச நன்மைகள் மற்றும் பாதுகாப்புகளை நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் பெறுவதற்கு மேலும் சில சட்டத்திருத்தங்களும் செய்ய வேண்டியுள்ளதாக சரவணன் கூறினார்.
