
🔊 Please select the font for Tamil Voice
சொஸ்மா எனப்படும் 2012 பாதுகாப்பு குற்றச் செயல் சட்டத்தின்கீழ், விசாரணையின்றி ஒருவரை அதிகபட்சம் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கும் சட்டப்பிரிவை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானம் நேற்று மக்களவையில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனூடின் முன் வைத்த அந்த தீர்மானத்திற்கு எதிராக 86 பேர் வாக்களித்தனர். 84 பேர் ஆதரவாக வாக்களித்த வேளை, 50 பேர் வாக்களிக்க மக்களவைக்கு வரவில்லை. அதையடுத்து அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என மக்களவைத் தலைவர் அசார் ஹாருன் ( Azhar Harun ) அறிவித்தார். அந்த முடிவை Hidup Rakyat ! எனும் முழக்கத்துடன் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
