
கெடாவில் நான்கு இலக்க எண் கடைகள் உட்பட அனைத்து சூதாட்ட மையங்களும் இவ்வாண்டு இறுதியோடு மூடப்படும் என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டக்டர் Mohd Hayathi othman தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த முடிவுக்கு நிதியமைச்சு அனுமதித்திருப்பதாகவும் இது தொடர்பான சட்ட சட்டநடைமுறைகளையயும் நிதியமைச்சு கருத்தில் கொண்டதையும் அவர் விவரித்தார். சூதாட்ட நிலையங்களுக்கான உரிமம், நிதியமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக உள்ளது. அதேவேளை, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் வர்த்தகை மையங்களுக்கான உரிமம் மாநில அரசுகளின் கட்டுப்பாடில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
