
ரமலான் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின்போது கட்சித் தாவல் தடுப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்படுமென, பிரதமர் உறுதியளித்திருப்பதாக DAP கட்சியின் தலைமைச் செயலாளர் Anthony Loke Siew Fook தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் உயர் நிலை தலைவர்கள் நடத்திய சந்திப்பின்போது , அந்த உறுதி வழங்கப்பட்டதாக அந்தோனி லோக் கூறினார். கூட்டரசு அரசாங்கத்துடன் பக்காத்தான் ஹரப்பான் செய்துக் கொண்ட கருத்திணக்க உடன்படிக்கையின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை இயற்றுவதாகும்.
