
கோவிட்-19 தாக்கத்தினால் பயண சேவை ரத்துசெய்யப்பட்ட 90 விழுக்காட்டு பயணிகளின் பணத்தை ஏர் ஆசியா திரும்ப ஒப்படைத்துவிட்டதாக இதற்கு முன் ஏர் ஆசியா குழுமம் என்ற பெயரில் விளங்கி வந்த Capital A Berhad-இன் தலைமை நிருவாக அதிகாரி Tan Sri Tony Fernandas தெரிவித்தார்.
இன்னும் சில மாதத்திற்குள் மேலும் அதிகமான பயணிகளின் பணத்தை திருப்பித் தந்துவிட முடியும் என அவர் கூறினார். அந்தப் பணத்தை திரும்ப ஒப்படைப்பதில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் நிதியுதவி பெறாமல் பெரிய தொகை சம்பந்தப்பட்ட அந்த தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக Tony Fernadas தெரிவித்தார். கோவிட் 10 தொற்றுக்கு முந்திய காலத்தில் ஏர் ஆசியாவில் 9 கோடி பேர் பயணம் செய்துள்ளதையும் அவர் விவரித்தார்
