
நாட்டில 5,000க்கும் மேற்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கு, விரைவில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி வழங்கப்படும் என்று அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 5,867 ஊடகப் பணியாளர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் ஊடகத்துறையினர் முன்களப் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதால்தேசிய
தடுப்பூசி திட்டத்தின் கீழ் அவர்களுக்கும்
கோவிட் தடுப்பூசியைச் செலுத்துவதில்
முன்னுரிமை தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
