
நெகிரி செம்பிலான், Rembau இடைநிலைப்பள்ளியில் 60 மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.
தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்காக ஏப்ரல் 11 முதல் 18 ஆம் நாள் வரை அப்பள்ளியை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் S . வீரப்பன் தெரிவித்தார்.
நேற்றுவரை அப்பள்ளியின் இரண்டாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரையிலான 38 மாணவர்கள் மற்றும் 22 மாணவிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
