
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியை தற்காத்துக் கொள்வது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லையென பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு தமது முழு கவனமும் கட்சி தேர்தலில்தான் இருக்கிறது என கூறிய அவர், போர்ட்டிக்சன் தொகுதியை தற்காத்துக்கொள்வது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நெகிரி செம்பிலான் மாநில பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ Aminuddin Harun அடுத்த பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லையென அவர் மேலும் விவரித்தார்.


