
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்புகளால் 6 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காபூல் நகரின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ரஹீம் ஷாகிட் உயர்நிலைப்பள்ளியில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அருகில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின்மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்க்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
