
ஏப்ரல் 29-யிலிருந்து மே 8-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் ‘ஓப் செலாமாட்’ நடவடிக்கையின்போது பழைய கைது ஆணையைக் கொண்டிருக்கும் வாகனவோட்டிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதோடு, பழைய சாலைக் குற்ற அபராதங்களை செலுத்தாமல் இருப்பவர்கள், அதனை செலுத்தும்படியும் உத்தரவிடப்படுவர் எனவும் தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் Datuk Razarudin Husain தெரிவித்தார்.
ஹரி ராயா பண்டிகையின்போது, வாகன விபத்துகளை குறைக்கும் அதே வேளை, வீடுகளில் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தையும் ‘ஓப் செலாமாட்’ கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
