
உள்ளாட்சி மன்றங்கள் முன்மொழிந்த வீட்டு வரி உள்ளிட்ட வரி விகித ஏற்றத்தை சிலாங்கூர் மாநில அரசு, இப்போதைக்கு ஏற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.
மாநில உள்ளாட்சி, பொதுப் போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டுக் குழுத் தலைவர் Ng Sze Han இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவிட் -19 தொற்றிலிருந்து மக்கள் மீண்டு வரும் இந்தநேரத்தில் வரி விகித அதிகரிப்பு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று கூறினார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஊக்குவிப்பு அளிப்பதே மாநில அரசின் முன்னுரிமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
