
15-ஆவது பொதுத் தேர்தலில் ஒத்துழைப்பு என்றால், அதை ஏன் இப்பொழுதே தொடங்கக்கூடாது என்று கருத்தின் அடிப்படையில் தலைநகரில் அரசியல் முன்னெடுப்புகள் அதிரடியாக இடம்பெற்றுள்ளன.
அன்வார் பிரதமராவதற்கு இதர கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் பி.கே.ஆர். முயற்சியை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution தற்காத்துப் பேசியுள்ளார்.
இந்த நடவடிக்கை கட்சி தாவல் அடிப்படையில் இல்லையெனவும் கருத்திணைக்க அடிப்படையில் அன்வார் பிரதமராகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வழங்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
எங்களிடம் 100 எம்.பிக்கள் உள்ளனர். அரசாங்கத்தை அமைக்க 112 எம்.பிக்களின் ஆதரவு தேவை . மேலும் சில எம்.பிக்களின் ஆதரவைத்தான் நாங்கள் திரட்டுகிறோம் என Saifuddin மேலும் தெரிவித்தார்.
