சிலாங்கூர் மாநில இந்தியர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பணிக்குழு ஒன்று திட்டமிடுவதாக மந்திரி பெசார் Amirudin shaari தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், மாநிலத்தில் உள்ள பி40 பிரிவு மக்களின் நலனை முன்னிட்டு, பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.
மிட்லன்ஸ் தோட்ட தமிழ்பள்ளியில் அடுத்தாண்டில் மாணவர் எண்ணிக்கையை 100ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிள்ளான் எம்பி Chales Sathiago தெரிவித்தார்.
மேலும், மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் 10,000 குடும்பங்களின் வறிய நிலையை உயர்ந்த தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.