
இந்திய தொழில் முனைவோரின் மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கிலான இந்த ஆய்வரங்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார். பெரும்பாலான இந்தியர்கள் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) மற்றும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) போன்ற மாநில அரசின் திட்டங்கள் பற்றி மட்டுமே அறிந்துள்ளனர். என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவும் கலந்து கொண்டார். தொடக்க கட்டமாக இந்த ஆய்வரங்கில் 200 இந்திய தொழில்முனைவோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக குணராஜ் கூறினார். ஆய்வரங்கிற்குப் பின்னர் மாநில அரசினா ல் வழங்கப்படும் வாய்ப்புகளை நேரில் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
